Categories
மாநில செய்திகள்

அடுத்த 10 வருடங்களில்… வண்டலூர் பூங்காவில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…!!!!!

தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். வனத்துறை மூலமாக தமிழகத்தின் 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த ஈர நிலத்திட்டம் செயல்படுகின்றது. அதேபோல பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் 32 கோடி மரக்கன்றுகள் நட  திட்டமிமிடப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக 33 சதவிகிதம் பசுமை போர்வை எனும் இலக்கை 10 வருடங்களில் அடைய திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் முதற்கட்டமாக இந்த வருடம் 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள வனத்துறை இடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் 500 மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடப்படுகின்றது.

Categories

Tech |