கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் முதல் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான நிலையை சந்தித்துள்ளது. பொருளாதாரத்திலும் படு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகளில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் செயல்பட்டு வருகிறது. அதில் மாடர்னா, ஸ்புட்னி வி, கோவாக்சின் என பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா நோய் தீவிரம் அடையாமல் தடுக்க 100% வெற்றியளிக்கும் தடுப்பூசியை தயாரித்து உள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த மாதமே அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க தேசிய ஒவ்வாமை & தொற்று ஆய்வு கழக இயக்குனர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார். விரைவில் உலகம் முழுவதும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.