வீட்டில் இருந்துகொண்டே ரிமோட் மூலம் வாக்களிக்கும் முறை இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்து விடும் என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த அவர் வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே வாக்களிக்கும் முறையை அனேகமாக அடுத்த மக்களவைத் தேர்தலில் அமுலுக்கு வர கூடும் என அவர் தெரிவித்தார். புதிய நடைமுறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
குறிப்பாக சென்னை ஐஐடி நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாகவும், ஒருசில பரிசோதனைகளுக்குப் பிறகு இது மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதன் முடிவாக அடுத்த ஆண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிவிக்க உள்ளதாகவும், விரைவில் இந்திய வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்துகொண்டே வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த முறை அமலுக்கு வந்தால் நூறு சதவீத வாக்கு பதிவாகும் என அவர் கூறியுள்ளார்.