தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தொற்று கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் விருதுநகரில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது .
அதன்படி திரையரங்குகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி மாஸ்க் அணிய வில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.