Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து வெற்றி!…. அதிஷ்ட வீரராக திகழும் தீபக் ஹூடா…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

நேற்று நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இப்போட்டியில் முதலாவதாக பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியது. இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்து குவித்தனர். இதனிடையில் தீபக்ஹூடா 25 ரன்கள் அடித்து குவித்தார். அதிபட்சம் சஞ்சுசாம்சன் 43 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். இறுதியில் இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றியடைந்தது.

இந்திய அணியின் இந்த வெற்றியின் வாயிலாக இந்திய ஆல்ரவுண்டர் தீபக்ஹூடா புது சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது தன் அறிமுக போட்டியிலிருந்து நேற்றைய போட்டி வரை அவர் இந்தியாவுக்காக மொத்தம் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றியடைந்துள்ளது. இந்த வருடம் பிப்ரவரிமாதம் ஹூடா தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார்.

அவற்றில் இருந்து இந்திய அணியானது 7 ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது. ஆகவே இது ஒரு தனித்துவமான சாதனையாக கருதப்படுகிறது. இதன் வாயிலாக இந்திய அணியினுடைய அதிஷ்டவீரராக தீபக் ஹூடா விளங்கி வருகிறார். இதற்கு முன்பாக ருமேனியா வீரர் சாத்விக் நடிகோட்லா, தான் அறிமுகமானதிலிருந்து 15 போட்டிகளில் அணியை வெற்றி பெற்ற சாதனையை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தன் முதல் சர்வதேச போட்டி விளையாடியதிலிருந்து 13 ஆட்டங்களில் அணியை வெற்றிபெற செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |