சீரியல் நடிகையான திவ்யா மற்றும் அர்னாவ் விவகாரம் சென்ற சில வாரங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில் 5 மாதம் கர்ப்பமான திவ்யா கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அண்மையில் திவ்யாவுக்கு அவர் நடித்துவரும் செய்வந்தி சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் வளைகாப்பு நடந்தது.
இந்த நிலையில் திவ்யா புது கார் ஒன்றை வாங்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கர்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் இன்றி இருந்தாலும்கூட தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றி கண்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.