Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து எரிவாயு குழாயில் ஏற்படும் கசிவு…? பெரும் பரபரப்பு..!!!!

நிலம் வழியாக கொண்டு செல்லும் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையை பெரும் அளவு ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து நிலம் மற்றும் கடல் வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு க் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து பெலாரஸ் வழியாக  ஜெர்மனிக்கு குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. டுருஷப் குழாய் என அழைக்கப்படும் இந்த எரிவாயு குழாய் திட்டமானது உலகின் மிகப்பெரிய  எரிவாயு குழாய் அமைப்பாகும் 4000 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த எரிவாயு குழாய் ஆனது நிலம் வழியாக அமைக்கப்பட்டிருக்கிறது இந்த எரிவாயு குழாய் இரண்டு பிரிவுகளாக பிரிந்து செல்கின்றது.

ரஷ்யாவில் இருந்து பெல்லாரஸ் வழியாக போலந்து ஜெர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. மற்றொரு பிரிவிலிருந்து ரஷ்யாவில் இருந்து பெல்லாரஸ் வரை அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயிலிருந்து ஒரு பிரிவு உக்ரைன் வழியாக ஸ்லோவேக்கியா, ஹங்கேரி, செக் குடியரசு போன்ற நாடுகளுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த சூழலில் ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்படும் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டிருக்கிறது போலந்து நாட்டின் பிலோப் நகரில் கடந்த 70 கிலோமீட்டர் தொலைவில் இந்த கசிவு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளன. இதன் காரணமாக போலந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் இதில் ஏதேனும் வெளிநாட்டு சதி இருக்கிறதா? எரிவாயு கசுவதற்கான காரணம் என்ன? எரிவாயு குழாய் வெடிவைத்து தகர்க்கப்பட்டதா? என்பது பற்றி போலந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவை சரி செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த மாதம்26 ஆம் தேதி நார்த் ஸ்ட்ரீம் ஒன்று மற்றும் நார்த் ஸ்டீம் இரண்டு போன்ற எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. டென்மார்க் ஸ்வீடன் கடல் பரப்பில் அடுத்தடுத்து எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த வெடிபொருள் மூலமாக ஸ்ட்ரீம்1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய்கள் தகர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து கடலுக்கடியில் சென்ற எரிவாயு குழாயில் கடந்த மாதம் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது நிலம் வழியாக கொண்டு செல்லும் எரிவாயு குழாயும் கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |