Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…. உயிழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை….!!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தினால் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்கவும், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கவும் ஆணையிட்டுள்ளார். இதையடுத்து மாநில அரசு சார்பில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5,00,000 ரூபாய் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |