ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி உடனடியாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.