மாமனாரை காயபடுத்திவிட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள ஒண்டிவீரன் தெருவில் அரசன் மற்றும் அவரது மனைவி சரோஜா வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் சத்யாவை சிலுக்குவார்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் முருகேசன் தினமும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனையறிந்த சத்யாவின் பெற்றோர்களான அரசன் மற்றும் சரோஜா முருகேசனை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் அவர்கள் இருவரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனையடுத்து சண்டையை விலக்க முயன்ற சத்யாவையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சத்யா அல்லிநகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து முருகேசனை கைது செய்துள்ளனர்.