அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயனை அடைவதற்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற முடியும். அதனுடன் குறைந்தபட்ச பென்ஷன் தொகைக்கான உத்திரவாதமும் அளிக்கப்படுகின்றது. இந்தத் திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் தரும் திட்டம் ஆகும். பென்ஷன் வாங்கும் நபர் திடீரென இறந்து விட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்ஷன் கிடைக்கும்.
இருவருமே உயிரிழந்து விட்டால் நாமினிக்கு பணம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் வருமான வரி சட்டம் பிரிவு 80 சி சி டி கீழ் வரிச் சலுகை கிடைப்பது கூடுதல் அம்சமாக உள்ளது. வங்கிகள் மற்றும் நிலையங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கின்றது. உங்கள் வங்கி கணக்கு உள்ள வங்கியிலேயே நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியும். பதிவு செய்வதற்கான படிவங்கள் ஆன்லைன் மூலமும் வங்கி கிளையிலும் கிடைக்கும். நீங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து வங்கியில் சமர்ப்பிக்கலாம். அல்லது வங்கியில் நேரடியாக சென்று கொடுக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் இணைவதற்கு மொபைல் எண் மற்றும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் 1000, 2000, 3000, 4000, 5000 என பென்ஷன் பெறும் வசதி இதில் உள்ளது. இதில் அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு 60,000 வரை பென்ஷன் வாங்க முடியும். உங்களுடைய 18 வயதில் இணைந்து மாதம் 210 ரூபாய் டெபாசிட் செய்தால் இந்த பென்ஷன் தொகை உங்களுக்கு கிடைக்கும். அதாவது தினமும் ஏழு ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்ய வேண்டும்.