தமிழகத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்பவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. அதன்படி சரியான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் நபர்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசர கால உதவியினை பொதுமக்கள் செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 5 முறை ஒரு நபருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். சாலை விபத்து நடந்த பிறகு காவல்துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பார்கள். அனைத்து விபத்துக்களும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யவும். இதில் தெரிவு செய்யப்படும் நேர்வுகள் 5 ஆயிரம் பரிசு தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.