உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதிகம் பேர் பயன்படுத்தும் முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp உள்ளது. தனது பயனர்களை தவிர whatsapp நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது பயனர்கள் தங்களுக்கு தாங்களே மெசேஜ் அனுப்பி கொள்ளும் message yourself அப்டேட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதன் மூலமாக பயணங்கள் ஏதாவது குறிப்பு எடுக்க விரும்பினால் அல்லது முக்கிய ஆவணங்களை சேமிக்க விரும்பினால் அதை நமக்கு நாமே மெசேஜ் அனுப்பி கொள்ள முடியும். பிறருக்கு பகிர வேண்டும் என்றால் கூட நமது மெசேஜ் க்கு சென்று வாட்ஸ் அப் மூலம் பிறருக்கு அனுப்பியும் கொள்ளலாம் .தற்போது பீட்டா பயணர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.