இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனென்றால் ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், டிக்கெட் செலவு குறைவாகவும் இருப்பதால் அனைவரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மேலும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது. ரயிலில் டிக்கெட் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் அல்லது ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்கின்றனர். அதற்காக ஐ.ஆர்.சி.டி.சி ஆப் உள்ளது. அதேபோல் டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கல், பிரிமியம் தட்கல் என அதிகம் செலவு செய்தாவது டிக்கெட் புக்கிங் செய்து ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.
IRCTC ரயில் பயணிகளுக்காக 139 என்ற மொபைல் நம்பர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நம்பரைப் பயன்படுத்தி நீங்கள் கீழ்க்காணும் விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.
1. PNR செக்கிங்
2. ரயில் வருகை/புறப்பாடு என்கியூரி
3. தங்குமிட வசதி
4. கட்டண விசாரணை
5. ரயில் நேர அட்டவணை என்கியூரி
6. ரயிலின் பெயர்/எண்
உதாரணம்: PNR 1234567890
” SEAT<ரயில் எண் > <DOJ** ddmmyy> <Station from:STD code> <station to:STD code>class><quota>***”139க்கு SMS செய்யவும்
உதாரணமாக: SEAT 12561 020611 0542 0571 SL G
(SL என்பது ஸ்லீப்பர் கிளாஸ். மற்ற பிரிவுகளுக்கும் இதேபோல பார்க்கலாம். ஏசி கோச்சுக்கு AC..)
“FARE<ரயில் எண்> <DOJ** ddmmyy> <ஆரம்ப ஸ்டேசன்: STD குறியீடு> <முடியும் ஸ்டேசன்: STD குறியீடு> <வகுப்பு> <கோட்டா>***” 139 க்கு SMS செய்யவும்.
உதாரணம்: கட்டணம் 12561 020611 0542 0571 SL G
“TIME<ரயில் எண்> என்று 139க்கு SMS செய்யவும்
உதாரணம்: TIME 14034
“TN<ரயில் பெயர்> அல்லது TN< ரயில் எண்>” என 139க்கு SMS செய்யவும்
உதாரணம்: TN 14034
இந்த சேவைக்கு பிரீமியம் கட்டணமாக நீங்கள் ஒரு SMSக்கு 3 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.