பிரபல நாடுகளுக்கு இடையே ரயில் இணைப்பு ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டில் ரயில் இணைப்பு உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வர்த்தக முக்கியத்துவம் பெற்ற அரபிக்கடலுடன் நேரடி தொடர்பை கொண்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார சாலை திட்டத்தை 5 லட்சத்து 10 ஆயிரத்து 790 கோடி ரூபாயில் மேற்கொள்கிறது. இந்நிலையில் பிரபல துறைமுகத்தையும், சீனாவில் அமைந்துள்ள மேற்கு பகுதியையும் இணைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக கராச்சி நகரிலிருந்து பெஷாவருக்கு ஆயிரத்து 554 கிலோ மீட்டருக்கு ரயில் இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் இருதரப்பு இடையே இறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உயர்மட்ட குழுவுடன் சீனா செல்கிறார். அப்போது 82 ஆயிரத்து 415 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.