நேற்று (மே.1) உலகின் பல்வேறு நாடுகளிலும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மெக்சிகோவில் உள்ள மலை கிராமத்தில் உழைப்பாளர் தினமான நேற்று கடுமையாக உழைக்கும் காரணத்தினால் அங்குள்ள மக்கள் கழுதைகளுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அதாவது “ஒடும்பா” என்ற அந்த கிராமத்தில் மக்கள் வறுமையால் தவித்து வருகின்றனர். எனவே அவர்கள் கழுதை வண்டிகளை தான் வாகனங்களுக்கு மாற்றாக பயன்படுத்தி வருகின்றனர்.
தங்களுக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் கழுதைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி ஒடும்பா கிராம மக்கள் கழுதைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் கழுதைகளுக்கு அலங்கார போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளது.