Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. இனி சிலிண்டர் மானியம் அதிகமா கிடைக்கபோது?….. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், இந்த பட்ஜெட் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதாவது, பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அதிகமாகவே இருந்தது. குறிப்பாக பொதுமக்களுக்குரிய நேரடி பரிமாற்றத் திட்டத்திற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக, பொதுமக்களுக்கான சமையல் சிலிண்டர் மானியத் திட்டத்திற்கு ரூபாய் 4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருட பட்ஜெட் ஒதுக்கீட்டை விட இது 18 சதவீதம் அதிகம் ஆகும். முன்னதாக கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் இது போன்ற பொதுநலத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு சற்று குறைந்து காணப்பட்டது. மேலும் சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியது. பல நபர்களுக்கு சிலிண்டர் மானியமானது வரவே இல்லை. அதன்பின் பல மாதங்களுக்குப் பின் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் சிலிண்டர் மானியம் வந்து சேர்ந்து, மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிலிண்டர் மானியத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வருடம் பட்ஜெட்டில் ரூபாய் 23,666.6 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. நேரடிப் பலன் பரிமாற்றத் திட்டம் என்பது பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அரசு தரப்பில் இருந்து செலுத்தப்படுவதாகும். சிலிண்டர் மானியம் திட்டமானது பொதுமக்களுக்கு பயனுள்ள ஒன்றாகவே இருக்கிறது. இதன் மூலமாக இடைத்தரகர்களின் சுரண்டல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |