போஸ்ட் ஆபீஸில் உள்ள குறிப்பிட்ட திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானத்தை பெறலாம். அது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அந்த திட்டத்தின் பெயர் கிசான் விகாஸ்பத்ரா. இவற்றில் உங்களுக்கு இரட்டிப்பு பணம் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக நிறைய வருமானத்தைப் பெறலாம். இத்திட்டத்தில் உங்களது தொகை வெறும் 123 மாதங்களில் இரட்டிப்பாகும். தபால் நிலையத்துக்கு சென்று இத்திட்டத்தை திறக்கலாம். இத்துடன் கூட்டுக் கணக்கையும் துவங்கலாம்.
இப்போது முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் 6.9% வட்டி பலனைப் பெறுகின்றனர். மற்றொரு புறம் நீங்கள் ஸ்டேட் வங்கியில் FD செய்தால், முதலீட்டாளர்கள் 6.25 % வட்டியின் பலனைப் பெறுகின்றனர். போஸ்ட் ஆபீஸில் நீங்கள் 5 -10 வருடங்களுக்கு நிலையான வைப்புத் தொகை செய்தால், நீங்கள் 6.90 % வட்டி விகிதத்தில் பெறுவீர்கள். இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூபாய்.1,000 முதலீட்டில் துவங்கலாம்.
அதேசமயத்தில் இந்தத் திட்டத்தில் அதிகபட்சம் முதலீட்டுக்கு வரம்பில்லை. அத்துடன் இந்த திட்டத்தில் 5 லட்சத்தை 123 மாதங்களுக்கு முதலீடு செய்தால் 6.9 % வட்டி கிடைக்கும். அதாவது முதிர்வுக்கான அசல் தொகை உடன் வட்டியின் பலனையும் பெறுவீர்கள். மத்திய அரசு சார்பாக இந்த திட்டத்தில் காலாண்டுக்கு ஒரு முறை வட்டிபலன் வழங்கப்படுகிறது. மற்றொரு புறம் முதலீட்டின்போது வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டால், நீங்கள் குறைவான (அ) அதிக பலனைப் பெறலாம்.