Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தும் நாசா….. தீவிரமாக நடைபெறும் பணிகள்….!!!!!

நாசா மீண்டும் மனிதர்களை நிலவிற்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது. 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களின் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்ப இருக்கின்றது. ஆர்டெமிஸ் 1,42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் தூரம் பயணம் மேற்கொள்கின்றது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் மின்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டு இருக்கின்றது. கடந்த 29ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணி அளவில் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுண்டவுன் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் எதிர்பாராத விதமாக சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக 40 வது நிமிடத்தில் போது கவுண்டவுன் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆர்டெமிஸ் 1 திட்ட ஹைட்ரஜன் குழு ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக நாசா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |