தாய்லாந்தில் உள்ள ஒரு தோட்டத்தில் யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளுக்கு காய்கள், பழங்கள் போன்றவற்றை வைத்து விருந்து பரிமாறப்பட்டது.
தாய்லாந்து நாட்டின் சோல்புரி மாநிலத்தின் உள்ள ஒரு தோட்டத்தில் 57 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளுக்கு 8 மீட்டர் மேஜை மீது காய்களும், பழங்களும் அடுக்கி வைக்கப்பட்டன. அதில் தர்பூசணி போன்ற பழவகைகளை யானைகள் ருசித்து உண்ட காட்சியை பலர் ஆர்வமாக கண்டுகளித்தனர்.