Categories
தேசிய செய்திகள்

அடடே… இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பர்ஸ்…? நடத்துனருக்கு குவிந்து வரும் பாராட்டு…!!!!!

தெலுங்கானாவில் சங்காரெட்டி மாவட்டத்தில் பதன்செரு என்னும் பகுதியில் இளம் பெண் ஒருவர் அரசு பேருந்தில் ஏறினார். அதன் பின் செகந்திராபாத் ஜூப்ளி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து விட்டு அனைத்து பயணிகளும் இறங்கிய பின் அதில் பர்ஸ் ஒன்று கிடந்ததை நடத்துனர் ரவிந்தர் கவனித்துள்ளார். இதனையடுத்து அந்த பர்ஸை திறந்து பார்த்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பரிசில் அதன் உரிமையாளர் விவரங்கள், ரூ.403 பணம் மற்றும் ஒரு கடிதம் போன்றவை இருந்துள்ளது. அந்த கடிதத்தை பிரித்துப் படித்துள்ளார்.

அப்போது “அந்த கடிதத்தில் தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. அதனால் வாழ்வை முடித்துக் கொள்ளப் போகிறேன்” என குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து பர்ஸில் வேறு ஏதேனும் இருக்கிறதா? என்று தேடியே போது அந்த இளம் பெண்ணின் ஆதார் அட்டை  இருந்துள்ளது. உடனடியாக ரவீந்தர் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சஜ்ஜனாருக்கு ட்விட்டர் வழியே அந்த கடிதம் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். பின்னர் சஜ்ஜனார் அந்தப் பெண்ணை அடையாளம் காணும்படி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து  காவலர்களின் உதவியுடன் அந்த பெண் கண்டறியப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சரியான நேரத்தில் செயல்பட்ட நடத்துனர் ரவிந்தர் மற்றும் பிற பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories

Tech |