கோவா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள் அங்கு ”ஐ லவ் யூ” என எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
கோவா மாநிலம் மர்கோவாவில் கொள்ளையடித்த வீட்டில் திருடர்கள் காதல் விருப்பத்தை தெரிவித்த புதுமையான சம்பவம் அரேங்கேறியுள்ளது. அந்த ஊரில் ஆசிப்ஜெக் என்பவர் தன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். இதையடுத்து 2 நாட்களுக்கு பின் அவர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் ஆசிப்ஜெக் உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை நடந்திருப்பதை அறிந்தார்.
அதாவது வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரமும் திருட்டு போயிருந்தது. மேலும் டி.வி. திரையில் “ஐ லவ் யூ’ என திருடர்கள் மார்க்கர் பேனாவால் எழுதி வைத்திருந்தனர். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் மர்கோவா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.