தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அரியலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளி ஆசிரியை ஒருவர் காதலித்ததாக தெரிகிறது.
இதனால் மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் ஆசிரியை மாணவனை காதலித்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.