Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!!…. இரவு முழுவதும் “தொழிலாளியை பலாத்காரம் செய்த 4 பெண்கள்”…. தொழிலாளி அளித்த பரபரப்பு வாக்குமூலம்….!!!!

ரோட்டில் நடந்து சென்று நபரை கடத்தி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் உள்ள கபுர்தலா  சாலையில் கடந்த திங்கட்கிழமை ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை நோக்கி ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த பெண்கள் ஒரு துண்டு சீட்டை அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். அப்போது அந்த பெண்கள் ஸ்பிரே ஒன்றை அவர் மீது அடித்துள்ளனர். இதனையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் காரை நிறுத்தி அவரது கை, கால்களை கட்டி போட்டு  அவரை  பாலியல் வன்கொடுமை  செய்துள்ளனர். இதனையடுத்து  நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவரது கை மற்றும்  கண்களை  கட்டி ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்  அந்த பெண்கள் நன்றாக ஆங்கிலம் பேசினர் என்றும், தன்னிடம் 2 பெண்கள்  பஞ்சாப் மொழியில் பேசினர் என அவர்  கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் அந்த  இளம்பெண்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Categories

Tech |