சீனா நாட்டில் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதியதாக 39 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று முதன்முறையாக சீனாவில் பரவியது. இந்த கொரோனா கட்டுப்பாடுகள் சீனாவில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் மொத்தம் 2,25,487பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதியதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன டெய்லி இதழ் தெரிவித்துள்ளது.
இந்த நகரிலுள்ள 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மதுக்கடைகள், திரையரங்குகள், சலூன்கள் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள மக்காவோ நகரத்தில் 6,00,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் புதிய தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிய வந்துள்ளது.