Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்த மாணவி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

11-ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓலையாமங்கலம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருவாரூரில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்த 15-ஆம் தேதி கவியரசி  வீட்டில் வேலை செய்யாமல் செல்போனை பார்த்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது பெற்றோர் கவியரசியை  கண்டித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த கவியரசி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கி நிலையில் இருந்த கவியரசியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கவியரசி  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |