Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி குழந்தை பலி… பெரும் சோகம்…!!!!!!

மகாராஷ்டிராவில் ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் சுதிர் ஜாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சுதிர் ஜாதவின் ஒரு வயது பெண் குழந்தைக்கு பக்கத்து வீட்டு சிறுமி ஜெல்லி மிட்டாய் கொடுத்துள்ளார். அதனை விழுங்கிய அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த சுதிர் ஜாதவ் சுதாரிப்பதற்கு முன்பாக குழந்தை மயங்கி கீழே விழுந்துள்ளது.

இதனையடுத்து சுதிர் ஜாதவ் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு வரும்  வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியதாவது, ஐந்து வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் சாப்பிடும் உணவு பண்டங்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சுவிங்கம், ஜெல்லி மிட்டாய்களை கொடுக்கும்போது கூடுதலாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |