காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட பல ஆண்டுகளாக கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ‘விரைவில் மேகதாது குடிநீர் திட்டத்தை தொடங்க வேண்டும்’ என்று கூறி பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி பாதயாத்திரையை தொடங்கியதால் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சி நடத்திய இந்த பாத யாத்திரையால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். மறுபக்கம் தமிழக காங்கிரஸ் கட்சி இந்த பாதயாத்திரை குறித்து எதுவும் பேசாமல் ‘கப்சிப்’ என்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.