Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே ….”அந்தர் பல்டி அடித்த பிரபல தயாரிப்பாளர்”….!! என்ன பண்ணாரு…. நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமா  உலகில் முன்னணி மூத்த தயாரிப்பாளர் கே ராஜன். இவர் சமீபத்தில் முகமறியான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் “அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம். தாயையும், தந்தையையும் வணங்குபவன் வேறு கடவுளை வணங்க வேண்டாம். பின்னர் விநாயகர் ஞானப்பழத்தை பெற்ற கதையையும் முருகன் கோபித்துக் கொண்டு மலைமேல் ஏறி அவர் இன்னும் இறங்கவில்லை” என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மதுரை ஆதினம் இவரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் “முருகன் என்றால் அழகு என்று அர்த்தம். முருகனை திட்டினால் அழகு போய்விடும். சினிமாக்காரர்களுக்கு எதுவும் தெரியாது. முருகனே விமர்சிப்பவர்கள் அதன் பலனை அனுபவிப்பார்கள். கடவுளை கொச்சைப்படுத்திய அவர்களின் படங்களை யாரும் பார்க்கக் கூடாது” என்றார் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கே ராஜன் தான் தவறாக பேசவில்லை என்று விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அந்த அறிக்கையில் “எல்லாம் அறிந்த நீங்கள் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க கூடாது என கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் எந்த இடத்திலும் கடவுள் முருகனை திட்டுகிற அளவிற்கு கடினமாக பேசவில்லை. இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் முகமரியான் படத்தின் இயக்குனரும், ஹீரோவும் தனது தாயை மேடைக்கு அழைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். அதனைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் தான் நான் தாய், தந்தையை வணங்கினால் எல்லா கடவுளையும் வணங்குவதற்கு சமம் என்று கருத்தைக் கூறினேன். அதற்காகவே முருகனையும், விநாயகரையும் பயன்படுத்தினேன். முருகனை தவறாக விமர்சிக்க எனக்கு எந்த நோக்கமும் இல்லை தமிழ் கடவுள் முருகன் தான். நான் பேசியது உங்களையோ முருகன் பக்தர்களையோ  பாதித்திருந்தால் நான் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |