அசாமின் சோனித்பூரில் இன்று(ஜூன்-18) அதிகாலை 2.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டரில் 7.1 ஆக பதிவானது. இந்நிலையில் மீண்டும் மதியம் 12.42 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 2.8 ஆக பதிவானது. இதுதவிர மேகாலயாவில் 4:20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து மணிப்பூரிலும் ரிக்டரில் 3.0 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வேறு பகுதிக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Categories
அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!!
