Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்”… 3 பேரை கைது செய்த போலீசார்…!!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வெண்ண முத்துப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அன்னக்கொடி (54) என்பவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் காசி (60). இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்னக்கொடி தனது கணவரை அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்ளும்படி தெரிவித்துவிட்டு அவர் வெளியே சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள நான்கு வயது சிறுமிக்கு காசி பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கின்றார். இதனை அடுத்து அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார் மேலும் இது பற்றிய சிறுமியின் தாய்  போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கலைமான் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து காசியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு துணையாக இருந்ததாக அன்னக்கொடியும் போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

Categories

Tech |