ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று குளித்து மகிழ்வர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர். இதனை அடுத்து நீண்ட வரிசையில் வாகனங்கள் சோதனை சாவடியில் அணிவகுத்து நின்றது. பின்னர் வனத்துறையினர் சோதனை நடத்தி வாகனங்களை அனுமதித்தனர்.