Categories
தேசிய செய்திகள்

அகமதாபாத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல் …!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அஹ்மதாபாத் மாவட்டத்தில் மட்டும் நாளை இரவு 9 மணிமுதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அகமதாபாத் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும் கூடுதல் முதன்மை செயலாளருமான திரு. ராஜீவ்குமார் குப்தா அறிவித்துள்ளார்.

இதன்படி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |